ஆம்.நான் தமிழ் நாட்டை விட்டு சீக்கிரமாக ஓடி விடலாம் என்று இருக்கிறேன்.சமீப காலமாக நான் எனது நண்பர்களிடம் ''விஜய் முதலமைச்சரானால் நான் தமிழ் நாட்டை விட்டு ஓடி விடுவேன்.'' என்று கூறி வந்தேன். ஆனால் இப்பொழுது விஜய் முதலமைச்சர் ஆகாவிட்டாலும் ஓடிவிட்டாலும் ஓடிவிடலாம் என்று இருக்கிறேன்.அதற்கான காரணம் விஜய் பேசிய பேச்சு.
இரண்டு நாட்களுக்கு முன்பு விஜய் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதை கண்டித்து நடத்திய ஆர்பாட்டத்தில் பேசிய பேச்சு என்னை உடனடியாக தமிழ்நாட்டை விட்டு ஓடும்படியான எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது.''நான் அடிச்சா தாங்க; மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட; வீடு போயி சேரமாட்ட . என்று தனது மேடைப்பேச்சில் கூறியிருக்கிறார். அய்யய்யோ எப்படிங்க இதையெல்லாம் கேட்டுகிட்டு இருக்கிறது?.
இதையெல்லாம் கூட சகித்துக்கொள்ளலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள். மற்றொன்று கூறினார்.அதை இங்கு எழுதவே கை வரவில்லை. ரசிகர்களை பார்த்து ; அதுவும் ஒரு மக்கள் பிரச்சனைக்காக போராட வந்த இடத்தில் '' என்னுடைய காவலன் படத்தில் குத்துப்பாட்டு ஒன்று கூட இல்லை என்று நீங்கள் வருத்தப்படுவது எனக்கு புரிகிறது.எனது அடுத்த படத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் குத்துப்பாட்டு நிச்சயம் இருக்கும் கவலைப்படாதீர்கள்.''
என்று கூறியிருக்கிறார்.
ஒரு போராளி பேசவேண்டிய பேச்சா இது?. இதையெல்லாம் கேட்டுக்கொண்டு நான் எப்படீங்க இங்க இருக்கமுடியும்?
அடுத்த மாதம் கேரளாவுக்கு எனது தாயை பார்க்க போகிறேன்.அப்படியே அங்கேயே நிரந்தரமாக தங்கியும் விடுவதாகவே முடிவு செய்துவிட்டேன்.
 
No comments:
Post a Comment