Sunday, March 6, 2011

நான் ஏன் ஓட்டுப்போட மாட்டேன்?


வருகின்ற தேர்தலில் மட்டுமல்ல நான் எப்பொழுதுமே ஓட்டுப் போடுவதில்லை.எனக்கு வாக்களிக்கும் வயது வந்த பிறகு முதலில் வந்த தேர்தல் 96 ல் நடந்த சட்டமன்ற தேர்தல்தான்.நான் என் வாழ்க்கையில் அந்த தேர்தலில் மட்டுமே வாக்களித்தேன். நான் 96  தேர்தலில் யாருக்கு வாக்களித்திருப்பேன் என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.எளிதில் யூகித்தும் கொள்ளலாம். எந்த ஒரு சிந்தனையும் செய்யாத ஒரு பெரிய அலையால் உந்தப்படும் பாமர  வாக்காளன் யாருக்கு அப்பொழுது வாக்களித்தானோ அவருக்குதான் நானும் வாக்களித்தேன்.ஏனென்றால் நானும் அப்போது ஒரு பாமரந்தானே!. எந்த ஒரு சிந்தனை வளர்ச்சியும் இல்லாத வாசிப்பு என்பதையே அறியாதவன் நான்.

அதற்கு பிறகு வந்த தேர்தல்களில் தான் நான் என்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்தேன்.அந்த தேர்தல்களில்ளெல்லாம் ஒட்டு போட வாக்குசீட்டுதான். மின்னணு இயந்திரம் இல்லை.எனக்கு எந்த கட்சியையும் பிடிக்காத காரணத்தால் எனது ஓட்டை செல்லாத ஓட்டாக போட்டுக்கொண்டிருந்தேன். அதாவது எல்லா சின்னத்திலும் முத்திரை பதித்து செல்லாத ஓட்டாக மாற்றிவிடுவது.அதன் பிறகு அது முடியாமல் போய் விட்டது.இயந்திரம் வந்து விட்டதால் அப்படி செல்லாத ஓட்டாக எனது ஓட்டை போடமுடியவில்லை.அதிலிருந்து நான் வாக்களிக்கவே செல்வதில்லை.

எனது நண்பர்கள்,''அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல் செய்கிறார்கள் . அதனால் தான் நான் வாக்களிக்க செல்வதில்லை என்று என்னை எண்ணுகிறார்கள்.ஆனால் அது தவறு.நான் வாக்களிக்க செல்லாதற்கு காரணம் அரசியல் வாதிகளின் ஊழல் அல்ல. மனிதர்களின் அடிப்படை குணங்களை நான் நன்றாகவே அறிவேன். தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்கமாட்டன். என்று பழமொழி கூட உள்ளது.    

மனிதர்களில் எத்தனைபேர் மகாத்மாவாக இருக்கிறார்கள்?.ஊழல் செய்யாமல் இருப்பதற்கு. இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே எடுத்துக்கொண்டால் அப்படிப்பட்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆகையால் இங்கு தேர்ந்தேடுக்கக்கூடியவர்களை தூய்மையை  அடிப்படையாய்  வைத்து தேர்ந்தேடுக்ககூடாது.அது முடியவும் முடியாது.அப்படியே நீங்கள் தேர்ந்தெடுக்க முற்ப்பட்டால் இப்பொழுது யாரை தேர்ந்தெடுப்பீர்கள்?.கருணாநிதி ஊழல் செய்து விட்டார் ஆகையால் அவரை தேர்ந்தெடுக்க முடியாது.சரி. வேறு யாரை தேர்ந்தெடுப்பீர்கள்?. ஜெயலலிதாவையா?.

ஜெயலலிதா என்ன  காந்தியின் பேத்தியா?. (நேர்மையில்).இல்லையே.அவரும் ஊழல் வாதிதானே?பிறகு வேறுயாரை?  விஜயகாந்தையா?. அவரின் நடவடிக்கைகள் அனைத்தும் காந்தியின் பேரன் கணக்காகவா இருக்கிறது?இல்லையே. அவரை சூழ்ந்துள்ள அவரது தொண்டர்கள் எதற்காக இருக்கிறார்கள்?மக்களுக்கு ஏதாவது நல்லது செய்தே  தீர வேண்டும் என்ற காரனத்திற்காகவா? இல்லையே.பிறகு வேறு யாராவது இருக்கிறார்களா?. வேறு என்னதான் செய்வது?. எந்த அடிப்படையில்தான் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது.

மீண்டும் சொல்கிறேன் எனக்கு மனிதர்கள் மேல் நம்பிக்கை இல்லை.மனிதர்கள் தங்கள் அடிப்படை குனாதிசியங்காலால் சுயநலவாதியாகவும் , தானே அனைத்தையும் உண்டு கொழுப்பவனுமாகவே இருப்பான். அது எந்த அரசியல் அமைப்பாக இருந்தாலும் சரி. கம்யூனிசம் உட்பட!. மகாத்மா காந்தி போன்றவர்கள் விதிவிலக்கு. அனைவருமே மகாத்மாக்களாகவே இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா என்ன?. இருக்கமாட்டார்கள்.இருக்கவும் முடியாது.அது இயற்கை.

நான் இதுவரை எந்த ஒரு சாலை விபத்திலும் சிக்கியதில்லை.நமது சாலை விதிகளின் படி இடது புறமாகத்தானே செல்லவேண்டும்?. சமீபத்தில் நான் எனது மோட்டார் சைக்கிளை எடுத்து ஸ்டார்ட் செய்து சாலையின் இடது புறமாக  செல்ல எத்தனிக்கும் போது  நேர் எதிராக ஸ்கூட்டரில் ஒரு விடலை பையன் படுபயங்கரமான வேகத்தில் வந்து ஏன் மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டான்.எனக்கு ஒரு கணம் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.நானே பருமனான ஆள்.எனது மோட்டார் சைக்கிளும் எடை அதிகமானது.அவன் என் மீது மோதிய வேகத்தில் எனது வண்டி நேர் எதிர் புறமாக திரும்பி கீழே விழுந்து விட்டது. போர்க்,மர்காட்  எல்லாம் உடைந்து நாசமாகியது.

எங்கள் ஊரில் (ஊர் பெயரை சொல்ல முடியாது. ஏனென்றால் இந்த பிளாக்கில் என்னை யாரென்று வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை). பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே ஒரு பெரிய ரவ்ண்டானா . அந்த ரவுண்டானா எப்போதுமே போக்குவரத்து நேரிசளுடனேயே இருக்கும். அங்கு எப்போதுமே சிக்னல் வேலை செய்யாது.
பொலிசாரும் இருக்கமாட்டார்கள். அப்படியே போலிஸ் இருந்தாலும் வேலை செய்யாமல் அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள்.அப்படியே  தப்பி தவறி வேலை செய்தாலும் ஒரு ரோட்டை நிறுத்தி மறு ரோட்டில் வருபவர்களை விடாமல் இரு சாராரையும் வரச்சொல்லி கையை காண்பிப்பார். இரு சாராரும் வந்து மோதிக்கொண்டும்  ஒருவரையொருவர் திட்டிக்கொண்டும் செல்வார்கள். இந்த போலீசார் வேலை செய்யாமல் இருந்தாலே புண்ணியமாக இருக்கும் நாங்களே எப்படியோ விழுந்தும் கேட்டும் சென்று விடுவோம்.

நான் அலுவலகத்திற்கு எப்போதுமே பதினோரு மணிக்குதான் வருவேன்.ஏனென்றால் அப்பொழுதான் சாலையில் நெரிசல் குறைந்திருக்கும்.மேலை நாடுகளில் கூட போக்குவரத்து நெரிசல் உள்ளதுதான்.ஆனால் அதற்கும் நம் நாட்டிலுள்ள  போக்குவரர்த்து நெரிசலுக்கும் வித்தியாசம் உள்ளது.  அவர்கள் யாரும் ராங் ரூட்டிலோ அல்லது இருபது  கி மீ வேகத்தில் செல்லக்கூடிய இடத்தில் என்பது கி மீ வேகத்திலோ செல்வதில்லை.

ஆனால் நம் நாட்டில் கார் ஓட்டுபவர்களும் ;மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களும் பொதுச்சாலையில் ஓட்டுபவர்களை போலவா ஓட்டுகிறார்கள்?. பார்முலா 1  ரேசில் ஓட்டுபவர்களை போல் அல்லவா ஓட்டுகிறார்கள். இப்படிப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உலவும் சாலையில் நான் எப்படி சீக்கிரம் அலுவலகத்திற்கு வரமுடியும்?.

சாலையில் மற்றொரு மிக முக்கியமான மற்றும் கேவலமான இடையூறு நாய்கள்.இந்த நாய்கள் எல்லாம் எந்த நேரத்தில் எந்த இடத்தில் இருந்து ரொட்டி பாயும் என்று அந்த கடவுளுக்கே தெரியாது.இப்படிதான் ஒருமுறை நான் சாலையில் சென்று கொண்டிருக்கிறேன்.எனக்கு முன்னால் ஒருவர் தன் மனைவியை தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமரவைத்து கூட்டி செல்கிறார்---- நம்  ஊர் பெண்கள் சர்கஸில் இருக்க வேண்டியவர்கள்.டூ வீலரில் இரண்டு  பக்கம் கால் போட்டு பின்னல் அமர்ந்தால்தான் ஓட்டுபவருக்கு எளிதாக இருக்கும்.சுதாரிக்கவும் முடியும்.ஆனால் நம் பெண்கள் என்ன செய்கிறார்கள்.ஒரு சைடாக அமர்ந்து அதுவும் கையில் குழந்தையுடன் அப்பப்பா 
என்ன அபாயகரமான பயணம்?---அவர்களின் குறுக்கே திடீரென ஒரு நாய் பாய்ந்து விடுகிறது.அவரால் சுதாரிக்க முடியாமல் வலது புறமாக விழுந்து விடுகிறார்கள். அப்பொழுது அவ்வழியே வந்த மினி பஸ் அவர்கள் இருவரின் தலைமீது ஏறிவிடுகிறது. ஸ்பாட் அவுட் .யாரால் நாயால்.

இந்த சின்ன சின்ன விசயங்களில் கூட ஏன் இந்த அரசியல் வாதிகள் சரி பண்ண மாட்டேன் என்கிறார்கள்?.இந்த விசயங்களை சரி செய்வதால் அவர்களுக்கு என்னதான் நஷ்ட்டம் வந்துவிடப்போகிறது?.இதை சை செய்வதன் மூலம் அவர்கள் ஊழல் வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வந்து விடப்போவதில்லையே.

(தொடரும்)     

No comments:

Post a Comment