Sunday, March 13, 2011

நான் ஏன் ஒட்டுப்போடமாட்டேன்? 2


இப்பொழுது மானுட சமூகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் எயிட்ஸ் நோய்க்கு நம் அரசியல்வாதிகள் என்ன தீர்வு கண்டுள்ளார்கள்?. சொல்லுங்கள். ''அரசியல்வாதிகள் என்ன மருத்துவ ஆராய்ச்சியாளர்களா?. அவர்கள் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்கிறீர்களா?''. என்று என்னை பார்த்து கேட்காதீர்கள்.நான் அவர்களை மருந்து கண்டுபிடிக்கசொல்லவில்லை. அதை மருத்துவ ஆராய்ச்சியார்கள் பார்த்துக்கொள்வார்கள்.

நான் சொல்ல வருவது எய்ட்ஸ் நோயை தடுக்க கட்டுப்படுத்த இந்த அரசியல்வாதிகள் என்னதான் செய்தார்கள்?.புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? என்று விளம்பரப்படுத்தினால் போதுமா?எத்தனை அப்பாவி பெண்கள் ஏன்? சில அப்பாவி ஆண்களுமே கூடத்தான் தாங்கள் எந்த தவறுமே செய்யாமல் திருமணம் என்ற பந்தத்தால் கணவனிடம் இருந்து மனைவியோ சிற்சில இடங்களில் மனைவியிடம் இருந்து கணவனோ அந்த நோயை பெற்றுக்கொள்வதில்லை?. நம் மக்கள் திருமணத்திற்கு முன் தாங்களாகவே ரத்தப்பரிசோதனை செய்துகொள்ளும் அளவுக்கு விழிப்புணர்வுடன் இருக்கிறார்களா என்ன?.

அல்லது மணமகனோ அல்லது மணமகளோ எதிர் வீட்டாரிடம் ரத்தப்பரிசோதனை செய்துகொள்ள முடியுமா?என்று கேட்கக்கூடிய அளவிலா நம் சமுதாய மனம் பண்பட்டு இருக்கிறது? எத்தனை எத்தனை அப்பாவிகள் இதன் மூலம் பாதிப்படைகிறார்கள்?.

இந்த கேடு கேட்ட அரசியல்வாதிகள் திருமணத்திற்கு முன் கட்டாயம் ஆண் பெண் இருவரும் ரத்தப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சட்டம் இயற்றி கடுமையாக நடைமுறைபடுத்தினால் என்ன?. ஹெல்மட் சட்டம் கொண்டு வந்து அனைவரையும் ஹெல்மட் வாங்க வைக்கும் பொழுது இவர்கள் அந்த சட்டத்தை நடைமுறை படுத்துவதில் எத்தனை முனைப்பு காட்டினார்கள்?. அதைப்போலவே இதையும் செய்தால் என்ன?

சரி,இந்த சட்டத்தை கொண்டுவருவதால் இவர்களின் ஊழல் வாழ்க்கைக்கு என்ன பங்கம் வந்துவிடப்போகிறது?. சொல்லுங்கள். இப்படி அவர்கள் அரசியலுக்கு வந்த காரணமான பணம் சம்பாதிப்பது என்ற கொள்கைக்கு எந்தப்பங்கமும் வராத இதைப்போன்ற காரியங்களை கூட செய்யாத காரணத்தினால்தான் நான் ஓட்டே போடுவதில்லை. 

(தொடரும்)

No comments:

Post a Comment