இந்த ப்ளொக்கில் தமிழில் வெளிவரும் தீவிர சினிமாவை பற்றி (அப்படி வருகிறதா என்ன?) மட்டுமே எழுத வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன்.நடுவாந்திர சினிமாவைக்கூட எழுதக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்து வருகிறேன். நடுவாந்திர சினிமா என்றால் என்ன? என்ற கேள்வி உங்களுக்கு வருமானால் நீங்கள் இந்த ப்ளோக்கை படிப்பதை தயவு செய்து நிறுத்திவிடுங்கள்.
அப்படி இருந்து வந்த என்னை ஒரு நடுவாந்திர தமிழ் சினிமா மாற்றி அதைப்பற்றி எழுத வைத்துவிட்டது. அது இந்த பதிவின் தலைப்பிலுள்ள சினிமாதான். ஆம் மைனாவேதான்.
எனக்கு சோசியல் போபியா என்ற ஒருவகையான மனநோய் இருப்பதனால் திரையரங்கிற்கு சென்று சினிமா பார்க்க முடியாத நிலைமையில் இருக்கிறேன்.ஆகையால் DVD  யில் தான் பார்த்தேன். அதற்காக நான் தயாரிப்பாளரிடமும் இயக்குனரிடமும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நல்ல பிரின்ட் உள்ள DVD , சினிமா வெளிவந்து இரண்டு மாதங்கள் கழித்துதான் கிடைக்கும் என்ற காரணத்தால் இரண்டு மாதம் கழித்து இப்பொழுதுதான் படத்தை பார்க்க நேர்ந்தது.
மைனா படத்தின் பாடல் வெளியீடு விழாவில் படத்தின் கிளிப்பிங்க்சையும் மற்றும் இயக்குனரையும் பார்த்த பொழுது இப்படம் ஒரு தோல்வி படமாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது. தோல்வி படம் என்றால் கலைப்படைப்பில் மட்டுமே தோல்வியாக இருக்கும். மற்றபடி வசூலில் நிச்சயமாக வெற்றிபெறும் என்று எண்ணியிருந்தேன். 
அதென்ன தோல்வியடையும் கலை?. (இதைக்கூட சொல்லனுமா ?) சொல்கிறேன் . பருத்திவீரன் வந்ததா? வெற்றியடைந்ததா? அதுஒரு நடுவாந்திர சினிமா அதையோற்ரி சுப்பிரமணிய புரம் வந்ததா? அதுவும் ஒரு வெற்றி பெற்ற நடுவாந்திர சினிமா. ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் நான் சொல்லும் வெற்றி என்பது கலையம்சத்தில் மட்டுமே. வசூலில் வெற்றி என்பதை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. 
நம் இயக்குனர்கள் என்ன செய்தார்கள்? இந்த இரண்டு படங்களையும் பார்த்துவிட்டு இவர்களும் ஆரம்பித்தார்கள் வரிசையாக வெண்ணிலா கபடிகுழு,மாயாண்டி குடும்பத்தார்,களவாணி........   இப்படி இந்த படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்றிருக்கலாம் . ஆனால் கலை தன்மையில் தோல்வியே.
ஆம் நானும் மைனாவை இந்த வரிசையில் வரும் மற்றொரு படம் என்றே எண்ணியிருந்தேன்.ஆனால் என்ன சொல்வது? பாதி படம் பார்க்கும் பொழுதே இயக்குனரை கட்டிப்பிடித்து முத்தம் தர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அற்புதம் அற்புதம்.ஆஹா இதுவல்லவோ சினிமா சங்கர் , மணிரத்னம் அப்புறம் அந்த ஆஸ்கார் நாயகன் போன்றவர்களெல்லாம் பிரபு சாலமனின் காலை கழுவி அந்த தண்ணீரை குடிக்கவேண்டும் . அப்பொழுதாவது புத்தி வருகிறதா என்று பார்க்கலாம்.
எந்த சந்தேகமும் இல்லாமல் கடந்த பத்து ஆண்டுகளில் இப்பொழுது துவங்கியுள்ள இந்த பத்தாண்டில் இதை போன்ற சினிமா வருமே என்பதே சந்தேகம் தான்.முதலில் நடிகர்களை பற்றி சொல்ல வேண்டும். தமிழ் சினிமா உலகில் ஒரு பேச்சு இருக்கிறதே சினிமாவில் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார்கள் என்று . அதையே தான் நானும் இப்படத்திற்கு சொல்ல வேண்டியுள்ளது. 
பிரபு சாலமனின் இயக்கத்திற்காக பாராட்டுவதை விட அவரின் கதைக்காக பவர்புல்லான சத்தான கதைக்காக பாராட்ட வேண்டும். அற்புதம் ஒரு தீவிர இலக்கிய வாதியின் எழுத்திற்கு சமமாக உள்ளது.அதில் படைக்கப்பட்டுள்ள பாத்திரங்கள் மிகவும் படைப்பூக்கத்துடன் படைக்கப்பட்டுள்ளது.அதை எப்படி .....சொல்வதென்று தெரியவில்லை.
ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களின் சூழ்நிலைக்கேற்ப அவர்களுக்கு நல்லவர்களாகவும் மற்றவர்களுக்கு கெட்டவர்களாகவும் அல்லது இந்த பொருளாதார வாழ்க்கை சூழலால் நெருக்கடிக்குள்ளான சுயநல வாதிகளாகவோ இருக்கிறார்கள். இதைப்போன்ற ஒரு படைப்பை கொடுக்க படைப்பாளிக்கு வாழ்க்கையின் மீதான மற்றும் மனிதர்களின் மீதான அவதானிப்பு எவ்வளவு கூர்மையாக இருக்க வேண்டும் என்பதை உணரவேண்டும்.
உதாரணத்திற்கு மைனாவின் அம்மா கதாபாத்திரத்தையே எடுத்துக்கொள்வோம். கணவனால் கைவிடப்பட்ட அவள் வறுமையில் உழலும் பொழுது தன் மகளும் தன்னை போல ஆகி விடக்கூடாது என்ற காரணத்தாலேயே மைனாவின் காதலை வெறுக்கிறாள் . தன் மகள் ஒரு வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற காரணமே ஒழிய சாதிப்பிரச்சனையோ அல்லது மாறாதோ அல்ல.இந்த காட்ச்சிகளை சொல்லியிருக்கும் விதம் மிக யதார்த்தம்.
3D  சினிமாவில் காட்ச்சியில் பார்வையாளர்களும் காட்ச்சியில் நேரிலேயே இருப்பதைப்போன்று
உணர்வார்கள்.அதைப்போலவே, மைனாவிலும் உணரமுடிகிறது 3 D  படமாக இல்லாவிட்டாலும்.உதாரணத்திற்கு மூணாறில் ஹோட்டலில் சாப்பிடும் காட்ச்சியை சொல்லலாம்.இன்னும் எழுத நிறைய ....உள்ளது .ஒரே வரியில் சொல்வதென்றால் வாழ்க்கையை பற்றிய ஒரு அற்புதமான தரிசனம்.
இன்னும் ஒன்று சொல்ல வேண்டியுள்ளது. தமிழ் சினிமாவில் இப்பொழுது உயிரோடிருக்கும் மேதைகள் கூட பிரபு சாலமனை பார்த்து பொறாமை கொள்வார்கள்.    
 
No comments:
Post a Comment