Sunday, February 27, 2011

ஒரு எழுத்தாளரும், ஒரு இயக்குனரும்


அந்த மாநிலத்தின் முதலமைச்சர்களை உற்பத்தி செய்து தரக்கூடிய அம்மாநிலத்தின் திரைப்படத்துறையை சார்ந்த பிரபலமாக இருக்கக்கூடிய  மற்றும் அம்மாநில மக்களின் அறிவுஜீவி இயக்குனர்கள் என்று பெயரெடுத்த இயக்குனர்கள்        ஐந்தாறு பேர் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள ஒரு இயக்குனருக்கு சொந்தமான அனைத்து வசதிகளும் அமையப்பெற்ற பங்களாவில் ஒன்று கூடியிருந்தனர்.
அந்த குழுவில் இருந்த மூத்த இயக்குனரும் அந்த நாட்டின் தேசிய மொழியில் அதிக படங்களை மணியாக  எடுத்தவருமான அந்த இயக்குனர்தான் முதலில் ஆரம்பித்தார். '' நான் ஏன் உங்களை எல்லாம் இங்கே வரச்சொல்லியிருக்கேன் தெரியுமா?''. என்று  கேட்டார்.
மற்ற இயக்குனர்கள் தயங்கியவாறு ''தெரியவில்லை'' என்றார்கள்.
இயக்குனர் வந்தியத்தேவன் மட்டும் '' அனேகமாக அந்த எழுத்தாளனை பற்றி பேசத்தான்னு நினைக்கிறேன்'' என்றார் ரெமி மாட்டினை சுவைத்தபடி.
கரெக்ட் இதுக்குதான் இதுக்குதான் நம்ம வந்தியத்தேவனை போல எல்லோரும் வாசிக்கவேண்டும் என்கிறது. பாருங்க நான் என்ன சொல்ல போகிறேன் எதுக்காக உங்களை இங்கே வரசொன்னேன்னு கரெக்ட்டா சொல்றார் '' என்றார் அந்த தேசிய மொழி மற்றும் தனது மாநில மொழி உட்பட நான்கு மொழிகளில் ஊத்திக்கொண்ட படத்தை எடுத்த மூத்த இயக்குனர்.
" யாருங்க இந்த எழுத்தாளன் கண்ணாயிரம் பெருமாள சொல்றீங்களா?'' என்றனர் மற்ற இயக்குனர்கள்.
'' ஆமாம் அவனைத்தான் சொல்லுறேன்.அந்த நாயி ஒழுங்கா கதைகள எழுதிக்கிட்டு இருக்க வேண்டியதுதான.பெரிய சினிமா விமர்சகனாமா தாயோளி எடுக்கற படத்தையெல்லாம் திட்டுறான் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான் பெரிய புடுங்கியா? இவன். நாம எவ்வளவு கஷ்டப்பட்டு படத்த எடுக்கறோம்.(எவ்வளவு கஷ்டப்பட்டு சுட்டு எடுக்கறோம் ) இவன் பாட்டுக்கு காலை ஆட்டிக்கிட்டு படத்தை பாத்து விட்டு நோகாம விமர்சனம்கிற பேர்ல படத்த தாளிச்சு எடுக்கிறான்.இவன் ஒரு படத்த எடுத்து பார்த்தான தெரியும் கஷ்டம்.தாயோளி '' என்று கோபத்தின் உச்சிக்கே சென்று கொண்டிருந்தான் வந்தியத்தேவன். முன்னாலிருந்த உடைக்கப்படாத ரெமி மார்ட்டினை வந்தியத்தேவன் கையிலெடுத்த பொழுது
அந்த மூத்த இயக்குனரின் உதவி இயக்குனர் '' அந்த பெருமாள் நாம எடுக்கிற ஒரு சில படங்களை பாராட்ட தவறுவதில்லையே! '' என்றான்.தயக்கமாக தனது குருநாதரை பார்த்தபடி.
''மசிரு எதோ ஒரு படத்த பாராட்டிட்ட போதுமா? மீதி படத்தையெல்லாம் என்ன செய்வதாம்'' என்றான்.வந்தியத்தேவன் அடுத்த ரவுண்ட் ரெமியை ஆரம்பித்தவாறு.
'' சரி இதற்க்கு என்னதான் செய்யலாம்? அவனை ஒருதடவையாவது அவமான படுத்தனும் அப்பத்தான் ஏன் மனசு ஆறும் '' என்றார் மூத்த இயக்குனர். அவரின் கோபமும் நியாயமானதே.இயக்குனரின் கடைசிபடத்தை பற்றிய பெருமாளின் விமர்சனத்தை படித்தால் தெரியும்.
சோபாவில் சாய்ந்தபடியே கால்களை ஆட்டியபடி வந்தியத்தேவன் '' நான் ஒரு திட்டம் வைத்துள்ளேன்.'' என்றான்.
''என்ன திட்டம் என்றார்'' மூத்த இயக்குனர்.
''இப்ப பெருமாள் தனக்கு பிரபல்யம் வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறான்.''
'' இப்பவே பிரபலமாதானே இருக்கான்''
'' நான் அதை சொல்லவில்லை.அவன் பிரபலமாக தெரிந்தவனாக இருப்பது அறிவு ஜீவிகள் வட்டத்தில் தானே?. ஆனால் அவன் பிரபலமாக ஆக நினைப்பது வெகுஜன மக்கள் மத்தியில். அதாவது நம்மை போல்.அதற்காக தனது முகத்தை மக்களின் மனதில் பதிய வைக்க நினைக்கிறான்.மேலும் வெகு ஜன பத்திரிக்கையிலும் எழுத ஆர்வமாக இருக்கிறான்''.
''எதற்கு? அவனுக்கும் ஆசை வந்து விட்டதா?''
'' இல்லை இல்லை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்.அவனாவது அப்படி ஆசைபடுவதாவது.அவன் ஆசையெல்லாம் தன்னுடைய கருத்தை மக்களிடம் சேர்ப்பதுதான்.அதற்காகவே அவன் வெகுஜன பத்திரிகையில் எழுதவும் டிவி.சினிமா போன்றவற்றில் தனது முகத்தை காட்ட விரும்புகிறான்''.
'' ஓ அப்படியா"'
''உன்னுடைய திட்டம் என்ன''
'' அவன் எப்படியாவது சினிமாவில் தலையை காட்டவேண்டும் என்று நினத்துக்கொண்டிருக்கிறான்.அதை வைத்தே அவனை நான் மடக்கப்ப்போகிறேன் பொறுத்திருந்து பாருங்கள்''
''பார்க்கலாம்"
********
கண்ணாயிரம் பெருமாளின் செல்போன் ஒலித்தது.கலா கவுமுதிக்காக கட்டுரை எழுதிக்கொண்டிருந்த பெருமாள் போனை சைலன்ட் மோடில் போட மறந்ததை எண்ணி எரிச்சலுடன் போனை எடுத்துப்பார்த்தான்.பதிவு செய்யப்படாத
எண்ணாக இருந்தது.அரைமனதுடன் ஆண் செய்து ''ஹலோ'' என்றான்.
'' சார் நான் சினிமா டிரெக்டர் வந்தியத்தேவன் பேசுகிறேன்''
''ஓ ''
'' சார் கொஞ்சம் பேச வேண்டும் ஒரு அப்பாயின்ட் மென்ட் கிடைக்குங்களா? இப்ப ஏதாவது தொந்தரவு செய்திட்டங்க்களா?''
"அதெல்லாம் ஒண்ணுமில்லை.என்னங்க ஏதாவது விசயமா?''
''இல்லைங்க சார் உங்க விமர்சனமெல்லாம் படித்தேன்.ரொம்ப நல்லா இருந்தது.அதான் உங்ககிட்ட பேசலாம் என்று...''
''ஓ பேசலாமே.எங்க சந்திக்கலாம்?''
''சார் உங்களுக்கு எங்க சவுகரியமோ அங்க சந்திக்கலாம்.எனது ஆபீசில் கூட சந்திக்கலாம் பேச கொள்ள வசதியாக இருக்கும்.''
''ஓகே.அங்கேயே சந்திக்கலாம். எப்ப வரட்டும்?''
''உங்க இஷ்டம் . நான் எப்பொழுதும் ப்ரீதான்.''
''சரி,இன்னைக்கு நைட் ஒன்பது மணிக்கு வருகிறேன்.''
*****
வந்தியத்தேவன் தனது உதவியாளர்களுடன் தனது அலுவலத்தில் டேபிள் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்தான்.''குழந்தைங்களா இன்னைக்கு நைட் எழுத்தாளர் கண்ணாயிரம் பெருமாள் நம்ம ஆபீசுக்கு வருகிறார். சரக்கு சைட் டிஷ் எல்லாம் வாங்கனும்.வாங்கி வெச்சுடுங்க.''என்றார்.
''என்ன சொல்லறீங்க சார்? உங்களுக்குதான் அந்த ஆளை பிடிக்காதே. ராசி ஆகிட்டீங்களா?'' என்றான் ஒரு உதவி இயக்குனன்.
தனது திட்டமெல்லாம் தனது உதவிகளுக்கு தெரியக்கூடாது என்று நினைத்த வந்தியத்தேவன் '' ஆமாம்பா அவர் சரியாதான எழுதறார்.நாம தான் அவரை தவறாக புரிந்துகொண்டோம்'' என்றான்.
வந்தியத்தேவனின் உதவியாளர்களில் ஒருவனும் பெருமாளின் தீவிர வாசகனுமான உதவி இயக்குனன் இளமாறன்''இப்பவாது புரிஞ்சுக்கிடீங்களே சந்தோசம்'' என்றான்.
சரியாக இரவு ஒன்பது மணிக்கு பெருமாள் வந்தியத்தேவனின் அலுவலகத்திற்கு ஆட்டோவில் வந்து இறங்கினார்.நீல நிற ஜீன்சும் ,தென்னை மரம் போட்ட அறிக்கை சட்டையும் அணிந்து படு ஸ்மார்ட்டாக இருந்தார் கண்ணாயிரம் பெருமாள்.
வந்தியத்தேவன் தனது உதவியாளர்களுடன் வாசலுக்கே வந்து பெருமாளிடம் கைகுலுக்கி வரவேற்று உள்ளே அழைத்துசென்றார்.வந்தியத்தேவன் தனது வாசிக்கும் அறைக்கு அழைத்துசென்று பெருமாளை அமரவைத்தார்.
அறையில் நூற்றுக்கனகான புத்தகங்கள் இருந்தன. நிறைய புத்தகங்கள் டேபிள் மீதும் சோபா மேலும் தரையிலும் பிரிக்கப்பட்டும் புக் மார்க் செய்யப்பட்டும் கவிழ்த்தியும் கிடந்தன.
''வெரிகுட் நிறைய படிப்பீங்க போலருக்கு'' என்றார் பெருமாள்.
ஆமாம் சார் என்றவாறே தான் படித்த படிக்கும் புத்தகங்களை பற்றி பெருமை பொங்க கூற ஆரம்பித்தார் வந்தியத்தேவன். அவை அனைத்துமே  பெருமாள் முப்பது வருடங்களுக்கு முன்னதாக வாசித்து அதைப்பற்றி பல புத்தகங்களும் எழுதியிருக்கிறார். ஆனால் காட்டிக்கொள்ளவில்லை. வந்தியத்தேவன் இன்னும் தமிழில் எதையுமே படிக்கவில்லை என்பதையும் யுகித்துக்கொண்டார்.
''சார் உங்க விருப்பத்த நான் நிறைவேர்ருக்கிறேன் சார்'' என்றார் வந்தியத்தேவன்.
பெருமாள் புரியாமல் விழித்தார்
''ஆமாங்க சார் என்னோட அடுத்த படத்துல ஒரு குத்துப்பாட்டு வைச்சுருக்கேன்.எப்படியும் அந்த பாட்ட ஒருலட்சம் தடவையாவது டீவில காட்டிருவாங்க.உங்கள அந்த பாட்டுல நடிக்க வைக்கிறேன்.உங்க முகம் ஈசியா மக்கள் மனசுல பதிஞ்சிடும்'' என்றார்.
பெருமாள் சங்கோஜத்துடனும் சந்தோசத்துடனும் தலையாட்டினார்.
நாட்கள் சென்றன. வந்தியத்தேவன் சொன்னபடியே பெருமாளை தனது படத்தின் பாடல் காட்ச்சியில் நடிக்கவைத்தார்.
படம் வெளியாவது பல காரணங்களால் தள்ளிப்போயிற்று.அதற்குள் வந்தியத்தேவன் தான் ஒரு வேற்று மொழி படத்தை தழுவி பலவருடங்கள் முன்பு எடுத்த படம் வெளியாயிற்று. அதன் தொண்ணூறு சதவீத காட்சிகள் மூலப்படத்தை அப்படியே பிறதிஎடுக்கப்பட்டிருந்தது. வந்தியத்தேவனின் கலைத்திருட்டை பலர் கண்டித்தனர்.அனைவரும் பெருமாள் படத்தை திருட்டு என்றே விமர்சனம் செய்வார் என்று எதிர்பார்த்தனர்.ஆனால் மாறாக பெருமாள் அப்படத்தை போற்றி எழுதி இருந்தார்.பலரால் பெருமாளின் அந்த விமர்சனம் விமர்சனத்திற்குள்ளனது.வந்தியத்தேவன் தனது படத்தில் பெருமாளை நடிக்கவைத்ததனாலேயே பெருமாள் அந்த படத்தை புகழ்கிறார் என்று பேச ஆரம்பித்தனர்.பெருமாள் அந்த படத்தை தான் பாராட்டுவதற்கான ஒரு சில காரணங்களை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை.
வந்தியத்தேவன் தனது திட்டம் பாதி நிறைவேறி விட்டதை நினைத்தது மகிழ்ந்திருந்தான்.
அதற்குள் பெருமாளின் புத்தக வெளியீடு வந்தது.தனது புத்தக வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழை வந்தியத்தேவனிடம் கொடுத்து தான் புதிதாக எழுதியிருக்கும் நாவலை பற்றி பேச வேண்டும் என்றும் அதற்கு முன்னதாக நாவலை படித்துவிடுங்கள் என்றும் பெருமாள் வந்தியத்தேவனிடம் கூறினார். ஒரு வேளை நாவலை படிக்கமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை விழாவிற்கு வாருங்கள் என்று கூறினார் பெருமாள்.
''இதற்காகத்தாண்ட இத்தன நாள் காத்திருந்தேன் '' என்று வந்தியத்தேவன் மனதிற்குள் நினைத்துக்கொண்டே வருகிறேன் பெருமாள் .வசியம் நாவலை படித்துவிட்டே வந்து பேசுகிறேன் என்றார்.மர்ம புன்னகையுடன்.
*******
பெருமாளின் லட்ச்சியம் இலக்கிய கூட்டங்களுக்கு மக்கள் அதிகம் வரவேண்டும் என்பது.தனது புத்தகங்கள் மட்டுமல்லாமல் தமிழில் வெளி வரும் அனைத்து தீவிர இலக்கிய  புத்தகங்கள் அதிக எண்ணிக்கையில் விற்க வேண்டும் என்பதாகும்.பெருமாளின் புத்தக வெளியீட்டிற்கு கடந்த வருடம் வந்திருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை  அதிகமான காரணத்தால் சென்ற வருடம் வந்திருந்தவர்களில் பாதிபேர் விழாமுடியும் வரை இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே இருந்தனர்.இது பெருமாளுக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுத்துவிட்டது. இதை மனதில் வைத்தே பெருமாள் இந்த முறை இரண்டாயிரம் பேர் அமரும் வகையில் பெரிய அரங்கை ஏற்பாடு செய்திருந்தார்.
பெருமாளின் பதிப்பாளர் ''இவ்வளவு பெரிய அரங்கமா?அத்தனை பேர் வருவார்களா? என்றார்.அதற்கு பெருமாள் ''அரங்கம் நிறைவது எனக்கு முக்கியமில்லை அனைவரும் அமரவேண்டும் என்பதே என்றார்.
விழா இனிதே துவங்கியது முதலாவதாக பெருமாளின் நூல் வெளியீடு நிகழ்ந்தது.பிறகு நூல்களை பற்றி ஒவ்வொருவராக  பேச ஆரம்பித்தனர்.வந்தியத்தேவன் மூன்றாவதாக பேச அழைக்கப்பட்டார்.மைக்கை பிடித்ததும் வந்தியத்தேவன் தான் கடைசியாக எடுத்த படத்தை பற்றி அரை மணி நேரம் பேசினார். கூட்டத்தில் இருந்தவர்கள் இதை எதுக்கு இங்க பேசி கொல்லுகிறார் என்று முனுமுனுக்க ஆரம்பித்தனர்.
சாவகாசமாக  பெருமாளின் நாவலை பற்றி வந்தியத்தேவன் பேச ஆரம்பித்தார்.''நான் நாவலை இன்னும் படிக்கவில்லை என்றதும் பெருமாள் ஆச்சர்யத்துடன் வந்தியத்தேவனை பார்த்தார்.வந்தியத்தேவன் தொடர்ந்தான்,''நான் இன்னும் நாவலை படிக்கவில்லை.ஆனால் நாவலை புரட்டிக்கொண்டிருக்கும் போது ஒரு வரியை பார்த்தேன்.முடிவு செய்து விட்டேன்.எனக்கெல்லாம் எத்தனை ஆயிரம் பக்கமுள்ள புத்தகமாக இருந்தாலும் அந்த புத்தகத்திலுள்ள ஒரு வரியை இல்லை ஒரு வார்த்தையை இல்லை இல்லை ஒரு எழுத்தை படித்தாலே போதும் அந்த புத்தகத்தை பற்றி முழுதும் தெரிந்து விடும்.பள்ளிக்கூடத்திலேயே ஒரு வருடம் படிக்கவேண்டிய பாடங்களை ஒரே நாளில் படித்து விடுவேன்.கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் வந்தியத்தேவனுக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்வு உள்ளதா ? என்று ஆச்ச்ர்யபட்டனர்,அதற்குபிறகு வந்தியத்தேவன் பேசிய பேச்சுகள் நாவலை படித்து முடித்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.குறிப்பாக நாவலை முழுதும் படித்துவிட்டு அதைபற்றி பேச இருந்த தமிழின் முக்கியமான படைப்பாளிக்கு பெரும் கோபத்தை உண்டுபண்ணியது வந்தியதேவனின் பேச்சு.
வந்தியத்தேவன்,'' நாவலை நான் ஒரு வரிதான் படித்தேன். அது எப்படி பட்ட நாவல் என்று அந்த ஒரு வரியிலேயே புரிந்துகொண்டேன்.சந்தேகமே இல்லாமல் இந்த நாவல் ஒரு சரோஜாதேவி எழுத்துதான்.சரோஜாதேவி புத்தகம் தான் என்றார்.அனைவருக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை எதோ வந்தியத்தேவன் வார்த்தைகளில் விளையாடுகிறார்.இப்படி நாவலை தாழ்த்தி கூறிவிட்டு பின்பு புகழ ஆரம்பிப்பாரோ நம் முதலமைச்சரை போல என்று நினைத்தனர்.ஆனால் வந்தியத்தேவன்''இது சரோஜா தேவி புத்தகம் தான் நான் அடித்துக்கூறுகிறேன்''.என்று கூறிவிட்டு அமர்ந்தார்.
பெருமாளுக்கு யாரோ தன்னுடைய முதுகில் தனக்கு தெரியாமல் நான்கு அடி நீளமுள்ள கத்தியை இறக்கியது போலிருந்தது.
*******
அதே கடற்கரை பங்களா.அதே இயக்குனர்கள் மத்தியில் வந்தியத்தேவன் வெற்றி களிப்புடன் கம்பீரமாக வீற்றிருந்தான்.அனைத்து இயக்குனர்களும் மாறி மாறி வந்தியதேவனை புகழ்ந்து கொண்டிருந்தனர்.
சூபர்ப் வாவ் பின்னிட்டே வந்தியா '' சரி இப்ப பெருமாள வச்சி ஒரு பாட்டு எடுத்தியே அதை என்ன செய்யப்போற?''
''ஹா ஹா ஹா ''  என்று இளித்துக்கொண்டே என்னைத்திட்டி இப்பொழுது அவனுடைய வெப்சைட்டுல எழுதிக்கிட்டு இருக்கான்.ஆனா அவன் நடிச்ச பாட்டில இருந்து அவனை நீக்கமா அப்படியே அவனை திரையில காட்டப்போறேன்.இதிலையும் அவனுக்கு அடிதான் எல்லோரும் நினைப்பாங்க பெருமாள் வந்திய தேவன இப்படி திட்டி எழுதறான் ஆனா பாருங்க வந்தியத்தேவன் எப்படி மனித தன்மையோட நடந்துக்கிறார் . பெருமாள் தன்னை திட்டுவதை கூட பொருட்படுத்தாம பெருமாள் நடிச்ச சீனை கட் பண்ணாம வச்சுருக்கார்.அவரல்லவோ மனிதன் என்று. எல்லோரும் பேச போறாங்க '' என்றார் வந்தியத்தேவன்.
''நீ கவி சாபத்துக்கு ஆளாயிட்ட  பார்க்கலாம் ''  என்று வந்திய தேவனிடம்  சொல்ல முடியாமல் மனதிற்குள் நினைத்துக்கொண்டான் உதவி இயக்குனன்.

No comments:

Post a Comment