Tuesday, March 15, 2011

ஆடுகளம் ---- பொறாமை பல்லின் விஷம்.


சோசியல் போபியாவினால் வழக்கம் போல் ஆடுகளம் படத்தையும் விடியோவிலேயே பார்க்க நேர்ந்தது. படத்தயாரிப்பாளரும் , படைப்பாளியும் மன்னிப்பார்களாக. இந்த ப்ளொக்கில் வணிகப்படங்களை பற்றிய என்னுடைய விமர்சனங்களை எழுதுவதில்லை என்ற முடிவிலிருந்து என்னை மீரா செய்த இரண்டாவது படம் ஆடுகளம்.முதல் படம் மைனா.

நான் இதுவரை பார்த்த தமிழ் சினிமாவிலேயே ; தமிழ் சினிமாவின் பிதாமகர்களின் சினிமாவை விட மிக அற்புதமான படம் ஆடுகளம்.பேட்டைக்காரன் (வ.ஐ.ஜெயபாலன்) சேவல் சண்டையில் நிபுணத்துவம் பெற்றவர்.தனது வாழ்க்கையையே சேவல் சண்டைக்காக அர்பணித்தவர். அவரின் சிஷயர்களாக  கருப்பு (தனுஷ்), துறை முதலியோர் இருக்கின்றனர். பேட்டைக்காரனின் சேவல் சண்டை எதிரியான போலிஸ் இன்ஸ்பெக்டருக்கும் , பேட்டைக்காரனுக்கும் இடையே சேவல் சண்டை நடக்கிறது.அதில் இன்ஸ்பெக்டரின் இரு சேவலிடம் மோத கருப்பு ஒரு சேவலை தேர்ந்தெடுக்கிறான். பேட்டைக்காரன் அந்த சேவலை மறுத்து அது தோற்றுவிடும் என்றும் வேறு சேவலை போட்டியில் ஈடுபடுத்துமாறு கூறுகிறார்.கருப்பு அதைமீறி தான் முதலில் தேர்ந்தெடுத்த சேவலையே சண்டைக்கு விட்டு ஜெயித்துவிடுகிறான்.

இது பேட்டைக்கரனுக்கு அவமானமாகி விடுகிறது.தன்னுடைய சிஷ்யன் தன்னைவிட திறமைசாலியாக இருப்பதை பேட்டைக்காரனின் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. பொறாமையால் பேட்டைக்காரன் தத்தளிக்கிறான்.ஆனால் கருப்பு 
தனது வெற்றிகளுக்கெல்லாம் தனது குருவான பேட்டைக்காரனே காரணம் என்று மனதார சொல்லிக்கொண்டு இருக்கிறான்.

தனது மனதில் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக பேட்டைக்காரன் கருப்பின் மீது ஏக கடுப்பில் இருக்கிறான்.பல வஞ்சக செயல்கள்;துரோகங்கள் மூலம் கருப்புவை பலி வாங்குகிறான். பேட்டைக்காரனின் சூழ்ச்சியை கடைசியில் தெரிந்து கொண்ட கருப்பு பெட்டைக்கரனை பார்த்து,''ஏன் இப்படி செய்தாய்?.எனக்கு அப்பா இல்லை.உன்னை என் அப்பாவின் ஸ்தானத்தில் வைத்துள்ளேன்.என்று கூறியவுடன் பேட்டைக்காரன் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு இறந்து போகிறான்.

கருப்பு தனது காதலியிடம் '' பேட்டைக்காரனின் சூழ்ச்சியை நான் யாரிடமும் கூறப்போவதில்லை. பேட்டைக்கரனை கொலை செய்தது நான்தான் என்று ஊர் நம்பிக்கொண்டிருக்கிறது.அப்படியே இருக்கட்டும் பேட்டைக்கரனின் பெயருக்கு  களங்கம் வரவேண்டாம்''என்று கூறுவதோடு படம் முடிகிறது.

எந்த துறையாக இருக்கட்டும் தனக்கு கீழுள்ளவர்கள் தன்னைவிட உயரத்திற்கு வரும் பொழுது அனைவர் மனதிலும் ஒரு துளியேனும் பொறாமை தீ எட்டிப்பார்க்கும்.என்ன செய்வது எத்தனை பேர் தங்கள் மனதில் பொறாமை இல்லாமல்  இருக்கிறார்கள்?.தான் பெற்ற மகனே தன்னை விட அதிகம் சம்பளம் பெறும் போது சிறிதளவேனும் பொறாமை படாதவர்கல்  இருக்கிறார்களா என்ன?.மனித மனம் எத்தகையது?. அதை எப்படித்தான் புரிந்துகொள்வதோ?.

பேட்டைகாரனிடம் கருப்பு  தான்  வெற்றி பெற்ற   பரிசு தொகையை சமர்ப்பிக்கும் பொழுது பேட்டைக்கரனின் மனம் வேறு ஒரு அவதாரம் எடுக்கிறது.இவன் தனக்கு கீழானவன் , சின்ன பையன்,இவன் ஜெயிச்ச தொகையை நாம் வாங்கக்கிக்கொள்வதா ?. என்று பேட்டைக்காரனின் மனம் தடுக்கிறது.அப்பொழுது பேட்டைக்கரனின் மனதில் தடை ஏற்படுத்தும் எது?. தன்மானமா? பொறாமையா?. ஆற்றாமையா?.

இதுவரை தமிழ் சினிமாவில் கதாபாத்திரங்களின் மன இருளை துல்லியமாக சொல்லியபடம் எனக்கு தெரிந்து வேறில்லை. படம் தொடங்கி அரைமணி நேரம் என்னடா படம் இது?.கத்துக்குட்டிதனமான நடிப்பாக இருக்கிறதே?. என்றுதான் எண்ணியிருந்தேன்.முதல் அரைமணி நேரம் அனைத்து நடிகர்களின் நடிப்பும் மகா கேவலமாக இருந்தது.பிறகுதான் படம் அதற்கு நேர் எதிர் நிலையை எடுத்தது.

எனக்கு படத்தின் இசை சுத்தமாக பிடிக்கவேயில்லை.கேட்க மிகவும் எரிச்சலாக இருந்தது.இதற்கு நான் குறை சொல்ல  மாட்டேன்.இசையில் நுண்ணிய பிழைகள் இருந்தால் மட்டுமே இசையமைப்பாளர்கள் பொறுப்பாக முடியும்.மொத்தமாகவே படத்திற்கு பொருந்தாமல் இருக்கின்ற இசைக்கு படத்தின் இயக்குனரே பொறுப்பாவார்.

படம் மிகசிறந்த இலக்கியத்தை படித்தால் உண்டாகும் மன நெகிழ்ச்சியை தருகிறது. வெற்றிமாறனை பற்றி இணையத்தில் தேடிய பொழுது அவர் பாலு மகேந்திராவின் கதை நேரம் சீரியலுக்காக நூற்றுக்கணக்கான சிறுகதைகளை  படிக்கநேர்ந்தது.என்று தெரிந்து கொண்டேன்.வெற்றி மாறன் இப்படியொரு நல்ல படத்தை கொடுக்க காரணமாக அமைந்தது அவரது அந்த வாசிப்பே என்பதை உணரமுடிகிறது.  

ஆடுகளம் பார்த்ததுமே வெற்றிமாறனின் முதல் படைப்பான பொல்லாதவனை பார்த்த்துவிட வேண்டும். என்ற எண்ணம்  மேலோங்கி விட்டது.மேலும் அவரது அடுத்த படைப்பான வட சென்னையை ப்பர்ர்கவும் ஆவலாக இருக்கிறேன்.

கடைசியாக வெற்றிமாறனிடம் ஒரு கேள்வி நீங்கள் ஆடுகளம் படத்தை வேறு எந்த மொழி படத்தையும் பார்த்து சுட்டு எடுக்கவில்லை தானே?.          

Sunday, March 13, 2011

நான் ஏன் ஒட்டுப்போடமாட்டேன்? 2


இப்பொழுது மானுட சமூகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் எயிட்ஸ் நோய்க்கு நம் அரசியல்வாதிகள் என்ன தீர்வு கண்டுள்ளார்கள்?. சொல்லுங்கள். ''அரசியல்வாதிகள் என்ன மருத்துவ ஆராய்ச்சியாளர்களா?. அவர்கள் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்கிறீர்களா?''. என்று என்னை பார்த்து கேட்காதீர்கள்.நான் அவர்களை மருந்து கண்டுபிடிக்கசொல்லவில்லை. அதை மருத்துவ ஆராய்ச்சியார்கள் பார்த்துக்கொள்வார்கள்.

நான் சொல்ல வருவது எய்ட்ஸ் நோயை தடுக்க கட்டுப்படுத்த இந்த அரசியல்வாதிகள் என்னதான் செய்தார்கள்?.புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? என்று விளம்பரப்படுத்தினால் போதுமா?எத்தனை அப்பாவி பெண்கள் ஏன்? சில அப்பாவி ஆண்களுமே கூடத்தான் தாங்கள் எந்த தவறுமே செய்யாமல் திருமணம் என்ற பந்தத்தால் கணவனிடம் இருந்து மனைவியோ சிற்சில இடங்களில் மனைவியிடம் இருந்து கணவனோ அந்த நோயை பெற்றுக்கொள்வதில்லை?. நம் மக்கள் திருமணத்திற்கு முன் தாங்களாகவே ரத்தப்பரிசோதனை செய்துகொள்ளும் அளவுக்கு விழிப்புணர்வுடன் இருக்கிறார்களா என்ன?.

அல்லது மணமகனோ அல்லது மணமகளோ எதிர் வீட்டாரிடம் ரத்தப்பரிசோதனை செய்துகொள்ள முடியுமா?என்று கேட்கக்கூடிய அளவிலா நம் சமுதாய மனம் பண்பட்டு இருக்கிறது? எத்தனை எத்தனை அப்பாவிகள் இதன் மூலம் பாதிப்படைகிறார்கள்?.

இந்த கேடு கேட்ட அரசியல்வாதிகள் திருமணத்திற்கு முன் கட்டாயம் ஆண் பெண் இருவரும் ரத்தப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சட்டம் இயற்றி கடுமையாக நடைமுறைபடுத்தினால் என்ன?. ஹெல்மட் சட்டம் கொண்டு வந்து அனைவரையும் ஹெல்மட் வாங்க வைக்கும் பொழுது இவர்கள் அந்த சட்டத்தை நடைமுறை படுத்துவதில் எத்தனை முனைப்பு காட்டினார்கள்?. அதைப்போலவே இதையும் செய்தால் என்ன?

சரி,இந்த சட்டத்தை கொண்டுவருவதால் இவர்களின் ஊழல் வாழ்க்கைக்கு என்ன பங்கம் வந்துவிடப்போகிறது?. சொல்லுங்கள். இப்படி அவர்கள் அரசியலுக்கு வந்த காரணமான பணம் சம்பாதிப்பது என்ற கொள்கைக்கு எந்தப்பங்கமும் வராத இதைப்போன்ற காரியங்களை கூட செய்யாத காரணத்தினால்தான் நான் ஓட்டே போடுவதில்லை. 

(தொடரும்)

Sunday, March 6, 2011

நான் ஏன் ஓட்டுப்போட மாட்டேன்?


வருகின்ற தேர்தலில் மட்டுமல்ல நான் எப்பொழுதுமே ஓட்டுப் போடுவதில்லை.எனக்கு வாக்களிக்கும் வயது வந்த பிறகு முதலில் வந்த தேர்தல் 96 ல் நடந்த சட்டமன்ற தேர்தல்தான்.நான் என் வாழ்க்கையில் அந்த தேர்தலில் மட்டுமே வாக்களித்தேன். நான் 96  தேர்தலில் யாருக்கு வாக்களித்திருப்பேன் என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.எளிதில் யூகித்தும் கொள்ளலாம். எந்த ஒரு சிந்தனையும் செய்யாத ஒரு பெரிய அலையால் உந்தப்படும் பாமர  வாக்காளன் யாருக்கு அப்பொழுது வாக்களித்தானோ அவருக்குதான் நானும் வாக்களித்தேன்.ஏனென்றால் நானும் அப்போது ஒரு பாமரந்தானே!. எந்த ஒரு சிந்தனை வளர்ச்சியும் இல்லாத வாசிப்பு என்பதையே அறியாதவன் நான்.

அதற்கு பிறகு வந்த தேர்தல்களில் தான் நான் என்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்தேன்.அந்த தேர்தல்களில்ளெல்லாம் ஒட்டு போட வாக்குசீட்டுதான். மின்னணு இயந்திரம் இல்லை.எனக்கு எந்த கட்சியையும் பிடிக்காத காரணத்தால் எனது ஓட்டை செல்லாத ஓட்டாக போட்டுக்கொண்டிருந்தேன். அதாவது எல்லா சின்னத்திலும் முத்திரை பதித்து செல்லாத ஓட்டாக மாற்றிவிடுவது.அதன் பிறகு அது முடியாமல் போய் விட்டது.இயந்திரம் வந்து விட்டதால் அப்படி செல்லாத ஓட்டாக எனது ஓட்டை போடமுடியவில்லை.அதிலிருந்து நான் வாக்களிக்கவே செல்வதில்லை.

எனது நண்பர்கள்,''அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல் செய்கிறார்கள் . அதனால் தான் நான் வாக்களிக்க செல்வதில்லை என்று என்னை எண்ணுகிறார்கள்.ஆனால் அது தவறு.நான் வாக்களிக்க செல்லாதற்கு காரணம் அரசியல் வாதிகளின் ஊழல் அல்ல. மனிதர்களின் அடிப்படை குணங்களை நான் நன்றாகவே அறிவேன். தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்கமாட்டன். என்று பழமொழி கூட உள்ளது.    

மனிதர்களில் எத்தனைபேர் மகாத்மாவாக இருக்கிறார்கள்?.ஊழல் செய்யாமல் இருப்பதற்கு. இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே எடுத்துக்கொண்டால் அப்படிப்பட்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆகையால் இங்கு தேர்ந்தேடுக்கக்கூடியவர்களை தூய்மையை  அடிப்படையாய்  வைத்து தேர்ந்தேடுக்ககூடாது.அது முடியவும் முடியாது.அப்படியே நீங்கள் தேர்ந்தெடுக்க முற்ப்பட்டால் இப்பொழுது யாரை தேர்ந்தெடுப்பீர்கள்?.கருணாநிதி ஊழல் செய்து விட்டார் ஆகையால் அவரை தேர்ந்தெடுக்க முடியாது.சரி. வேறு யாரை தேர்ந்தெடுப்பீர்கள்?. ஜெயலலிதாவையா?.

ஜெயலலிதா என்ன  காந்தியின் பேத்தியா?. (நேர்மையில்).இல்லையே.அவரும் ஊழல் வாதிதானே?பிறகு வேறுயாரை?  விஜயகாந்தையா?. அவரின் நடவடிக்கைகள் அனைத்தும் காந்தியின் பேரன் கணக்காகவா இருக்கிறது?இல்லையே. அவரை சூழ்ந்துள்ள அவரது தொண்டர்கள் எதற்காக இருக்கிறார்கள்?மக்களுக்கு ஏதாவது நல்லது செய்தே  தீர வேண்டும் என்ற காரனத்திற்காகவா? இல்லையே.பிறகு வேறு யாராவது இருக்கிறார்களா?. வேறு என்னதான் செய்வது?. எந்த அடிப்படையில்தான் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது.

மீண்டும் சொல்கிறேன் எனக்கு மனிதர்கள் மேல் நம்பிக்கை இல்லை.மனிதர்கள் தங்கள் அடிப்படை குனாதிசியங்காலால் சுயநலவாதியாகவும் , தானே அனைத்தையும் உண்டு கொழுப்பவனுமாகவே இருப்பான். அது எந்த அரசியல் அமைப்பாக இருந்தாலும் சரி. கம்யூனிசம் உட்பட!. மகாத்மா காந்தி போன்றவர்கள் விதிவிலக்கு. அனைவருமே மகாத்மாக்களாகவே இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா என்ன?. இருக்கமாட்டார்கள்.இருக்கவும் முடியாது.அது இயற்கை.

நான் இதுவரை எந்த ஒரு சாலை விபத்திலும் சிக்கியதில்லை.நமது சாலை விதிகளின் படி இடது புறமாகத்தானே செல்லவேண்டும்?. சமீபத்தில் நான் எனது மோட்டார் சைக்கிளை எடுத்து ஸ்டார்ட் செய்து சாலையின் இடது புறமாக  செல்ல எத்தனிக்கும் போது  நேர் எதிராக ஸ்கூட்டரில் ஒரு விடலை பையன் படுபயங்கரமான வேகத்தில் வந்து ஏன் மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டான்.எனக்கு ஒரு கணம் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.நானே பருமனான ஆள்.எனது மோட்டார் சைக்கிளும் எடை அதிகமானது.அவன் என் மீது மோதிய வேகத்தில் எனது வண்டி நேர் எதிர் புறமாக திரும்பி கீழே விழுந்து விட்டது. போர்க்,மர்காட்  எல்லாம் உடைந்து நாசமாகியது.

எங்கள் ஊரில் (ஊர் பெயரை சொல்ல முடியாது. ஏனென்றால் இந்த பிளாக்கில் என்னை யாரென்று வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை). பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே ஒரு பெரிய ரவ்ண்டானா . அந்த ரவுண்டானா எப்போதுமே போக்குவரத்து நேரிசளுடனேயே இருக்கும். அங்கு எப்போதுமே சிக்னல் வேலை செய்யாது.
பொலிசாரும் இருக்கமாட்டார்கள். அப்படியே போலிஸ் இருந்தாலும் வேலை செய்யாமல் அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள்.அப்படியே  தப்பி தவறி வேலை செய்தாலும் ஒரு ரோட்டை நிறுத்தி மறு ரோட்டில் வருபவர்களை விடாமல் இரு சாராரையும் வரச்சொல்லி கையை காண்பிப்பார். இரு சாராரும் வந்து மோதிக்கொண்டும்  ஒருவரையொருவர் திட்டிக்கொண்டும் செல்வார்கள். இந்த போலீசார் வேலை செய்யாமல் இருந்தாலே புண்ணியமாக இருக்கும் நாங்களே எப்படியோ விழுந்தும் கேட்டும் சென்று விடுவோம்.

நான் அலுவலகத்திற்கு எப்போதுமே பதினோரு மணிக்குதான் வருவேன்.ஏனென்றால் அப்பொழுதான் சாலையில் நெரிசல் குறைந்திருக்கும்.மேலை நாடுகளில் கூட போக்குவரத்து நெரிசல் உள்ளதுதான்.ஆனால் அதற்கும் நம் நாட்டிலுள்ள  போக்குவரர்த்து நெரிசலுக்கும் வித்தியாசம் உள்ளது.  அவர்கள் யாரும் ராங் ரூட்டிலோ அல்லது இருபது  கி மீ வேகத்தில் செல்லக்கூடிய இடத்தில் என்பது கி மீ வேகத்திலோ செல்வதில்லை.

ஆனால் நம் நாட்டில் கார் ஓட்டுபவர்களும் ;மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களும் பொதுச்சாலையில் ஓட்டுபவர்களை போலவா ஓட்டுகிறார்கள்?. பார்முலா 1  ரேசில் ஓட்டுபவர்களை போல் அல்லவா ஓட்டுகிறார்கள். இப்படிப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உலவும் சாலையில் நான் எப்படி சீக்கிரம் அலுவலகத்திற்கு வரமுடியும்?.

சாலையில் மற்றொரு மிக முக்கியமான மற்றும் கேவலமான இடையூறு நாய்கள்.இந்த நாய்கள் எல்லாம் எந்த நேரத்தில் எந்த இடத்தில் இருந்து ரொட்டி பாயும் என்று அந்த கடவுளுக்கே தெரியாது.இப்படிதான் ஒருமுறை நான் சாலையில் சென்று கொண்டிருக்கிறேன்.எனக்கு முன்னால் ஒருவர் தன் மனைவியை தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமரவைத்து கூட்டி செல்கிறார்---- நம்  ஊர் பெண்கள் சர்கஸில் இருக்க வேண்டியவர்கள்.டூ வீலரில் இரண்டு  பக்கம் கால் போட்டு பின்னல் அமர்ந்தால்தான் ஓட்டுபவருக்கு எளிதாக இருக்கும்.சுதாரிக்கவும் முடியும்.ஆனால் நம் பெண்கள் என்ன செய்கிறார்கள்.ஒரு சைடாக அமர்ந்து அதுவும் கையில் குழந்தையுடன் அப்பப்பா 
என்ன அபாயகரமான பயணம்?---அவர்களின் குறுக்கே திடீரென ஒரு நாய் பாய்ந்து விடுகிறது.அவரால் சுதாரிக்க முடியாமல் வலது புறமாக விழுந்து விடுகிறார்கள். அப்பொழுது அவ்வழியே வந்த மினி பஸ் அவர்கள் இருவரின் தலைமீது ஏறிவிடுகிறது. ஸ்பாட் அவுட் .யாரால் நாயால்.

இந்த சின்ன சின்ன விசயங்களில் கூட ஏன் இந்த அரசியல் வாதிகள் சரி பண்ண மாட்டேன் என்கிறார்கள்?.இந்த விசயங்களை சரி செய்வதால் அவர்களுக்கு என்னதான் நஷ்ட்டம் வந்துவிடப்போகிறது?.இதை சை செய்வதன் மூலம் அவர்கள் ஊழல் வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வந்து விடப்போவதில்லையே.

(தொடரும்)