எங்களுக்கெல்லாம் சிந்திக்க கத்துக்கொடுத்த சாருவுக்கு வணக்கம்.நந்தலாலா   பற்றிய உங்களின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் வைத்துப்பார்க்கும் பொழுது  நீங்கள்     நந்தலாலா படத்தை பாராட்டுவதாக தோன்றுகிறது.(இன்னும் உயிர்ம்மையில் உங்ககளின் விமர்சனம்   படிக்கவில்லை. 
நீங்கள் , ஜெயமோகன் ஏதோ ஒரு மேடையில் இயக்குனர் மணிரத்தினத்தை   புகழ்ந்து பேசியதை கண்டித்து ஏதோ நீங்கள் தான் ''பாரதியின் வாரிசு'' என்ற  தோரணையிலும், சமரசமின்மையின்   மறு உருவமாகவும்   இருப்பதாக பேசி வரும்  நீங்கள் எப்படி நந்தலாலா படத்தை ஒரு கிளாசிக் என்று சொல்லலாம்?. இது ஒரு   ஜப்பானிய படத்தின் தழுவல் என்று உங்களுக்கு தெரியாதா?. அப்படியே    ஹாலிவுட் படத்தை தழுவி   எடுக்கப்பட்ட எந்திரனை   சாடிய நீங்கள் எப்படி நந்தாலாலவை மட்டும் கிளாசிக் என்று சொல்ல முடிகிறது? . என்னை பொருததவரையில் எந்திரன்   கூட பரவாயில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும்   என்ற  ஒரே நோக்கத்திற்காக எடுக்கப்பட்டதால் அது வேறு ஒன்றை தழுவி எடுக்கப்பட்டுள்ளது, ஆனால் நந்தலா அப்படியா ஒரு அறிவார்ந்த படம் எடுக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டுள்ள படைப்பாளி ஒரு படத்தை   சுட்டு எடுத்துள்ளார். டைட்டிலில் கூட இதைப்பற்றி மிஷ்கின் ஒரு வார்த்தை கூறவில்லை. இது எவ்வளவு   பெரிய அயோக்கியத்தனம்    என்று உங்களூக்கு தெரியவில்லையா?.   ஒரு கமர்ஷியல் இயக்குனர் ஒரு படத்தை சுட்டு எடுப்பதற்கும்   ஓர் தீவிரமான சினிமாவை தரப்போகிறேன் என்று கூறிக்கொண்டு ஒரு படத்தை தழுவி எடுத்து விட்டு மேலும் தழுவி எடுக்கப்பட்ட படத்தை பற்றி    ஒன்றுமே கூறாமல் அந்தப்படத்தின் டைரக்டருடன் சேர்ந்து அமர்ந்து  நந்தலாலவை பார்க்க வேண்டுமென்று  கூறி  வரும் மிஷ்கினுக்கு என்ன  ஒரு தடித்தனம் இருக்கவேண்டும். சரி, ஒரு வாதத்திற்கு  இது அந்த ஜப்பானியபடத்தின்   ஒரு ''இம்ப்ரஸ்''   மட்டுமே மற்றபடி அதன் காட்சிகள்    வேறு இதன் காட்ச்சிகள் வேறு என்று கூறினாலும், ஒரு அசலான ஒரு சினிமா எடுக்க நினைக்கும் மிஷ்கினை சுற்றி உங்களை போல் பல சிறந்த எழுதாளர்களிருக்கிரார்களே!   அவர்களை வைத்து   ஏன்  ஒரு அசலான படைப்புகளை தரமுடியவில்லை. இதுதான்  எனக்கு ஒரு புரியாத puthiraakave      இருக்கிறது. அதாவது தமிழ் மொழியில்   கமர்சியல் படம் எடுப்பவரும்  சரி,  தீவிர சினிமா எடுப்பவரும்  சரி ஏன் வேற்று மொழிபடங்கலையே    நாட வேண்டியிருக்கிறது.
தயவு செய்து   நீங்கள்   தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் . .உங்களுக்கு இருக்கும் பிரபலமே போதுமானதாக உள்ளது. அதாவது உங்கள் முகம் தமிழ்  நாட்டில் அனைவருக்கும்   தெரியவேண்டும் என்ற உங்கள் எண்ணம் புரிகிறது . . அதனாலேயே நீங்கள் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக தோன்றுகிறது, பாருங்கள் ஒரு படத்தில்  நடிக்க வாய்ப்புகிடத்துள்ளதால் அவ்வாய்ப்பை   கொடுத்த  இயக்குனரின் படத்தை பாராட்ட வேண்டியுள்ளது. இது தேவையா?. முன்பு போலவே சமரசமில்லாத விமர்சகனாகவே   இருங்கள். பாரதியைப்போல. தமிழ்  எழுத்தாளனுக்கு மட்டுமில்லை  என்னை போன்ற இளைங்கர்களுக்கும்   முன்னுதாரணமாக   இருங்கள்.
 
எங்க சாரு வ பத்தி சொல்ல உனக்கு என்ன யோக்கியத இருக்கு?. நீ இதுவரை எத்தன புத்தகம் எழுதியிருக்கே?பெருசா சாரு பத்தி பேச வந்துட்ட
ReplyDelete