Tuesday, November 30, 2010

சுட்டபழம் மிஷ்கினுக்கு ஒரு கடுதாசி

 
ஒலக மகா ஆட்டக்காரா  சாரி டைரடக்கரே நீங்க பெரிய தில்லாலங்கடிதான். படம் எடுக்கறதில இல்ல படத்த சுடரதுல்ல.இங்க உருப்படியா விமர்சனம் எழுதிக்கிட்டு இருக்கிறது சாரு மட்டுந்தான் அவருக்கே அல்வாகுடுத்துட்டிங்களே .அந்த ஆளுக்கு நடிக்கனுமுன்னு இருந்த  ஆசைய பயன்படுத்திக்கிட்டு உங்க படத்துல நடிக்க வெச்சுப்புட்டீங்க. அப்புறம் எப்படி சாரு வால உங்களோட இந்த ''சுட்டு எடுத்த படமான நந்தலாலவ'' விமர்சனம் பண்ண முடியும்?. அப்படியே ஜெயமோகனையும் கூட்டிப்போய் படத்த போட்டு காமுச்சுப்புட்டீங்க. அந்தாளும் அடுத்தபடத்தில வசனம் எழுத கூப்புடுவாரு அப்படின்னு படம் சூப்பருங்கறாரு. அப்படியே மனுஷ மூத்திரன் சாரி மனுஷ புத்திரன், பெரபஞ்சன், பாவம் செல்லதுர, போன்ற சினிமா அறிவு சீவிகளையும் ஏதோ சொக்குபொடி போட்டு படத்த பாராட்ட வெச்சுப்புட்டீங்க.
 
அப்புறம் உங்க பேட்டியே இசை அருவியிலே பாத்தனுங்க. கொன்னுபுட்டிங்க. அப்படியே தமிழு டைரக்டருங்க எப்படி பேசுவாங்களோ அப்படியே பேசிப்புட்டீங்க. பிரசவநீங்க , உங்களோட அல்லக்கைகள குழந்தநீங்க .ஒன்ன  உட்டுடீங்க. சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி   ''சாப்பாட்டுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் எத்தனைநாள்  பட்டிணியிருந்தேன்''   இதெல்லாம் சொல்லமருந்துபுட்டீங்க. பரவால்ல சீக்கிரமே விகடன்ல ''இவன்தான் மிஷ்கின்னு''   ஒரு தொடர் எழுத கூப்புடுவாங்க  இதே எல்லாத்தையும்  மறக்காம சொல்லிபுடுங்க டைரடக்கரே.(ஒரு அறிவார்ந்த   படைப்பாளி பேசற மாதிரியா இருந்தது உங்க பேச்சு).
இப்ப லேட்டாயிடுச்சு  மிச்சத்த அடுத்த கடுதாசியில சொல்லறேன்.

No comments:

Post a Comment