Saturday, January 22, 2011

விஜயகாந்துக்கு ஒரு கடிதம்

திரு.   விஜயகாந்த் அவர்களுக்கு வணக்கம்.உங்கள் கட்சி தொண்டர்களும் ,உங்களின் ரசிகர்களும் உங்களை அழைப்பதைப்போல புரட்சி கலைஞர் என்றோ கேப்டன் என்றோ என்னால் உங்களை விளிக்க முடியாது. ஏனென்றால் எனக்கு புரட்சியை பற்றியும் , புரட்சியாளர்களை பற்றியும் நன்றாகவே தெரியும். ஆகையால் தங்களை விஜயகாந்த் என்றே அழைக்கிறேன்.



இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம்; வெற்றி பெற்று முதலமைச்சர் ஆகலாம்.கட்சி ஆரம்பிக்கலாம்.ஆகையால் நீங்கள் ஒரு நடிகர் என்ற காரணத்தினால் அரசியலுக்கு வரக்கூடாது என்றோ முதலமைச்சர் ஆகக்கூடாது என்றோ ராமதாஸ் போன்றவர்கள் கூறிவருவதைப்போல நான் கூற வரவில்லை.தேர்தலில் நில்லுங்கள் வெற்றி பெறுங்கள் ஆட்சியை பிடியுங்கள் அது உங்கள் உரிமை.



ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் நடிகர்கள் சினிமாவில் நடிப்பது கட்சி ஆரம்பித்து முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற காரணத்திற்க்காக மட்டுமே இதையே நான் எதிர்க்கிறேன். ஒரு சமையற்காரனோ, ஆலது நாவிதனோ தங்கள் தொழிலை எப்படி தங்கள் வருமானத்திற்கு மட்டுமே செய்கிறார்களோ அதைப்போல நடிப்பதை உங்கள் வருமானத்திற்கான தொழிலாக மட்டுமே பாருங்கள்.



அதை விடுத்து முதலமைச்சர் கனவை அல்லது குறிக்கோளை மட்டுமே அடிப்படையாக கொண்டு நடிக்காதீர்கள். இதை அனைத்து நடிகர்களுக்குமே சொல்கிறேன்.மிகவும் பின்தங்கிய பீகார் போன்ற மாநிலங்களில் கூட இதைப்போன்ற நிலைமை இல்லை.ஆனால் நீங்கள் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்தே. நீங்கள் திட்டம் போட்டெல்லாம் சினிமாவிற்கு வந்து அரசியலில் குதிக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.



யாருடனும் கூட்டணி கிடையாது மக்களுடனும் கடவுளுடனும் தான் கூட்டணி என்ற உங்கள் முழக்கமும் அதனை செயல் படுத்திக்கொண்டிருப்பதும் மிகவும் பாராட்டுக்குரியதே.நீங்கள் கருணாநிதியை கிழி கிழி என்று கிழிப்பதேல்லாம் நன்றாகவே உள்ளது. ஆனால் ஜெயலிதாவை மட்டும் சமீபகாலமாக விமர்சிப்பதில்லையே ஏன்?

கருணாநிதியை வீழ்த்த ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தால் தான் முடியும் என்ற விவேகமா?.



எனது நண்பர்கள் பலர் கடந்த சட்டமன்ற தேர்தலில் உங்களுக்குதான் வாக்களித்தார்கள்.கருணாநிதி ஜெயலலிதா போன்ற அராஜக ஊழல் வாதிகளுக்கு மாற்றாக உங்களை எண்ணியதே அதற்கான காரணம். உங்களின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக அல்ல. நீங்களும் ஒரு ஐந்து ஆண்டு அதிகாரத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள் என்பது உங்களை சுற்றியிருக்கும் கூட்டத்தை பார்த்தாலே புரிந்து விடும்.



ஒருவேளை நீங்கள் காந்தின் பேரனாக கூட இருக்கலாம்.ஆனால் உங்கள் கட்சியின் பொறுப்பில் இருக்கும் கட்சிகாரர்கள் அனைவரும் எதற்காக உங்களின் கட்சியில் இருக்கிறார்கள்?. நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஒரே காரனத்திற்காகவா? சேலத்தில் நடந்த உங்களின் மாநாட்டிற்கு கூட்டம் கூட்ட செலவு செய்தார்களே அந்த செலவை எதற்காக செய்தார்கள்? இந்த நாட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற காரனத்திற்காகவா? யாருடனாவது உங்கள் கட்சி கூட்டணி சேர்ந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் அதில் சம்பாதித்துக்கொள்ளலாம் என்ற காரணத்தினால் தானே?.



நீங்கள் சேலம் மாநாட்டில் பேசிய பேச்சு நன்றாகவே இருந்தது.நீங்கள் கருணாநிதியை பார்த்து கேட்ட கேள்விகளும் அருமை.அப்படியே நீங்கள் உங்களுக்கு பின்னால் மேடையில் அமர்ந்திருந்த உங்கள் கட்சி நிர்வாகிகளை பார்த்து '' நான் முதலமைச்சர் ஆனால் நீங்கள் ஒருவரும் எம் எல் எ சம்பளத்தை தவிர வேறு எதையுமே சம்பாத்திக்க முடியாது என்றும் ஒரு ரூபாய் உழல் செய்தீர்கள் என்றால் கூட கடுமையான தண்டனை வழங்குவேன் பார்த்துக்கொள்ளுங்கள் இதற்க்கு சம்மதம் என்றால் எனது கட்சியில் இருங்கள் இல்லையென்றால் கட்சியை விட்டு வெளியேறி விடுங்கள் '' என்று கூற உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?



அப்படி நீங்கள் கூறினால் உங்கள் கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் தொடர்ந்து இருப்பார்களா? ஆகையால் நீங்கள் ஒரு வேளை ஆட்சியை பிடித்தாலோ அல்லது அதிகாரத்தை பகிர்ந்து கொண்டாலோ நீங்களும் மற்றுமொரு கருனாநிதியாகவோ அல்லது ஜெயலலிதாவாகவோ தான் மாறுவீர்கள் என்பது இப்பொழுதே தெளிவாக தெரிகிறது.



நீங்கள் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தால் நாங்கள் எதற்கு உங்களுக்கு ஒட்டு போட வேண்டும்?. நேரடியாக ஜெயலலிதாவிற்க்கே வாகளித்துவிடுவோமே!. இடையில் நீங்கள் எதற்கு?. ஒன்று சொல்கிறேன் தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே வெற்றி பெற்றவர் என்று ஆகிவிடாது. தனது கொள்கைக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் அதனால் தனக்கு எந்த பாதிப்பு வந்தாலும் அதைதாங்கிகொண்டு அந்த கொள்கைக்காக போராடுவதே உண்மையான வெற்றியாகும் .



ஆகையால் நீங்கள் அதிகாரத்தை பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் கொள்கையான மக்களுடனும் ஆண்டவனுடனும் மட்டுமே கூட்டணி வேறு யாருடனும் கூட்டணி கிடையாது என்ற கொள்கையுடனே இருங்கள்.சமரசமின்மையின் வெற்றியை ருசியுங்கள்.வரலாற்றில் உங்களுக்கு இடம் இருக்கும். அதை விடுத்து மற்றொரு ராமதாசாகவோ , வைக்கோவாகவோமாறிவிடாதீர்கள்.



ஆனால் இதற்கெல்லாம் உங்கள் கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் எப்படி உடன்படுவார்கள் என்றுதான் தெரியவில்லை. எத்தனை நாள்தான் செலவு செய்து கொண்டே இருப்பார்கள்? சம்பாதிக்க வழியில்லாமல்.......

Sunday, January 9, 2011

கனவுவேட்டை


அன்று இரவு  2  மணி அளவில் ல.சா.ரா வின் ''அபிதா'' 
நாவலை படித்துக்கொண்டிருந்தேன். தூக்கம் கண்ணை
சுழற்றியது.நாவலை அப்படியே புக் மார்க் செய்து மூடி
வைத்துவிட்டு தூங்கிப்போனேன்.

ரஜினியின் வீட்டில் நான் நுழைந்த பொழுது அங்கே
ரஜினி பெங்களூரிலிருந்து வந்திருந்த தனது நண்பர்களுடன்
உரையாடிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கிருந்த
ஒருவர் கேட்டார்,'' என்ன ரஜினி நீங்க நடக்கறதையெல்லாம்
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறீர்களா?'' என்று.

அதற்க்கு ரஜினி,'' என்ன சொல்றீங்க? எதைப்பற்றி சொறீங்க?
என்று கேட்டார்.அதற்கு நண்பர்,'' இல்ல, இந்த விஜய்
காங்கிரஸ்ல போய் சேர்ந்து அரசியல்ல நுழைய முயற்சி
பண்ணினார்.பிறகு அது சரிவரவில்லை என்றவுடன்  ஆ தி மு க
வில் சேர முயற்சி பண்றதா சொல்லிக்கிறாங்க ம்...
இப்படி உங்களுக்கு பல காலத்துக்கு பின்னாடி சினிமாவுக்கு
வந்தவன் இப்பொழுது  அரசியலிலும் நுழைந்து முதலமைச்சராஆகறதுக்கு 
திட்டம் போட்டுக்கிட்டு இருக்கான். ஆனால் 
நீங்களோ உச்சத்தில் இருந்து கொண்டு இருக்கிறீர்கள்.நீங்கள்
இப்படியே யோசனை செய்து கொண்டுஇருந்தீர்கள் என்றால் 
விஜய் முதலமைச்சர் ஆனாலும் ஆகி விடுவான். அப்படி 
ஆகி விட்டால் உங்கள் இமேஜ் என்ன ஆகும்? யோசித்துப்பாருங்கள்.''
என்றார். 

அதற்க்கு ரஜினி  , '' ஓ அதப்பத்தி சொல்றீங்களா
அதைத்தான் நானும் தீவிரமா யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.
என்ன பன்னருதுனே ஒண்ணுமே புரிய மாட்டேங்குது.விஜயகாந்த்
என்னடாதுனா திடீர்ன்னுகட்சிய   ஆரம்பிச்சு
யாரு கூடவும் கூட்டணி சேர மாட்டேன்னு சொல்லி ஒரு
பெரிய மாஸ உருவாக்கிக்கிட்டு இருக்காரு. விஜய் பைய்யன் 
வேற முதலமைச்சர் ஆகியே தீருவதுன்னு அலையறான்.
இவனுங்க இப்படியே பன்னுனானுங்கன்ன நான் என்னதான் 
பண்ணறதுன்னே தெரியல.வயசும் ஆகிக்கிட்டே இருக்குது.யோசனை பண்ணுறேன்.''  

உடனே ரஜினியின் மற்றொரு நண்பர் சொன்னார் 
, '' இப்படி யோசனை பண்ணிக்கிட்டு இருக்குறதுல எந்த பிரயோசனமும் இல்ல. வரப்போற தேர்தல்ல விஜய் ஆ தி மு க வுக்கு பிரச்சாரம்பண்ணுனா நீங்க எந்த ஒரு யோசனையும் செய்யாம தி மு க வுக்கு
ஆதரவா வாய்ஸ் கொடுக்கறதுதான் நல்லது. உங்களுக்கு தான் 
வாய்ஸ்கொடுக்கறது கைவந்த கலையாயிற்றே.
மறுபடியும் கலைஞர்முதலமைச்சர் ஆகிட்ட விஜய் பயல நடிக்கவே விடாம பண்ணிடுவாரு.முடிஞ்சா தமிழ் நாட்ட விட்டே துரத்தி விட்ட்ருவாறு.அப்புறம் 
விஜயகாந்த் கட்ச்சியும் ஒண்ணுமே இல்லாம போய்டும். விஜையகாந்த் கட்ச்சியில இருக்குறவங்கல்லாம் காட்ச்சிய விட்டே போயிடுவாங்க 
இதன் மூலமா விஜயகாந்தையும் ஓரம் கட்டிடலாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா. இல்ல. இல்ல. மூன்று மாங்கா கலைஞர் ஜெயிச்சுட்ட விஜய்
சினிமாவிலேயே இருக்கமுடியாது.விஜயகாந்த் கட்சி இருக்கவே இருக்காது.

அப்புறம் ஜெயலலிதாவ கேக்கவே வேண்டாம்  அதிகாரத்துல இல்லைனா 
அவுங்க ரொம்ப மூட் அவுட் ஆகிடுவாங்க. அவங்க கட்சியில இருக்கறவங்கல்லாம் 
தேர்தல்ல செலவு பண்ணியும் , ஆர்பாட்டம் பாணியும், கூட்டம் 
சேர்க்கவே செலவு செஞ்சே ஓட்டாண்டி ஆகிடுவாங்க. தி மு க வுல சேர்ந்துடுவாங்க. அழகிரி சொல்லறமாதிரி ஆ தி மு க வே இருக்காது.
so ,  unga  imaja  காப்பாத்திக்கனுமுனா நீங்க வரப்போற தேர்தல்ல
கலைங்கருக்கு ஆதராவா வாய்ஸ் கொடுக்கறதுதான் நல்லது.
அப்புறமா கலைங்கருக்கு பிறகு நீங்க அரசியலுக்கு வர்ரதுனாலும் 
வரலாம் இல்லைனா அப்படியே இருந்தர்ரதுனாலும் இருந்துக்கலாம்.''.

அதற்க்கு ரஜினி , '' வெரி குட்.  வெரி குட் . நல்ல ஐடியா அப்படியே செஞ்சுடாலாம்'' என்று உற்ச்சாகத்துடன் புளு லேபில் ஜானி வாக்கரை  கையிலெடுத்தார்.